இன்று மே 17. ஒரு ஞாயிற்றுக்கிழமை.
ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டத்தில் மற்றுமொரு குறித்துவைக்கவேண்டிய நாள்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துவந்தவர்களுக்கோ வரலாற்றில் மறக்கவே முடியாத நாள்.
இலங்கையின் அரசியல் போக்குகளை உன்னிப்பாக அவதானித்து வருபவர்களுக்கு அவ்வரசியற்போக்குக்கள் புதிய பரிணாமமொன்றினை வெளிப்படையாகவே எடுக்கவிருக்கும் காலத்துக்கான கதவாக அமையும் நாள்.
ஐந்தாறு ஆண்டுகளாய் இணையத்தின் அரசியல் எழுத்துப்போக்கின் வாசகனாக இருந்த நான் இனித் தனி வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதவே வேண்டும் என்ற முடிவுக்கு வந்து முதல் பதிவை இடும் நாள்.
இணையத்தமிழ்க் குடிமக்களுக்கு வணக்கம்.
இந்த நாள் கரிநாளாயிருக்கலாம்; புனிதநாளாய்ப்போகலாம்; இலங்கையின் இரண்டாவது சுதந்திர நன்னாளாகலாம்; பிரபாகரன் இறந்த நாளாகலாம்; இல்லாமலும் போகலாம்; மங்கலமற்ற நாளாக அமையலாம்; கொழும்பில் பாற்சோறு கொடுத்துக் கொண்டாடும் பண்டிகையாகலாம்; எதிர்பார்ப்புக்கள்தரலாம்; கனவுகளை கொல்லலாம்; கனவுகளைக் கலைத்தும் விடலாம்.
இன்று நான் எழுதத்தொடங்குகிறேன்.
இந்த நாள் நல்ல நல்ல, அது நல்ல நல்ல
5/17/2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment